கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு, 6.3.2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணி அளவில் நடத்தப்பட்டது.
யுகா பெண்கள் அமைப்பின் தலைவி திருமதி. அல்லிராணி தலைமையில் நடைபெற்ற , இந்த நிகழ்வில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் திரு. Dr. காமராஜ் அவர்கள் , தலைமை விருந்தினராகவும், மகப்பேறு நிபுணர் Dr. ரமணிதேவி சிறப்பு விருந்தினராகவும், கலந்து கொண்டனர். நிகழ்வின் போது , கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு , கை கழுவும் முறை பயிற்சி, சித்த மற்றும் அலோபதி பாதுகாப்பு முறை சிறப்பு ஆலோசனைகள் மருத்துவர்களால் வழங்கப்பட்டது. இந்திரா கணேசன் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் திரளாக பங்கு பெற்ற இந்த நிகழ்வில், ஆசிரியர்கள், பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
" alt="" aria-hidden="true" />